Thursday, 13 May 2021
Monday, 15 March 2021
இ மெயிலை கண்டுபிடித்தவர் (தமிழர்)
இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்)
ஒரு தமிழர் . . . .
V.A. Shiva Ayyadurai, Inventor of EMAIL
இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை அல்லவா…
அந்த வசதியை அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?
ஆம்… அதுதான் உண்மை. இன்று உலகையே ஒரு வலைக்குள் இணைத்த பெருமைக்குரிய இ மெயில் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒருவர்தான் கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.
அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பதுவயது நிரம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.
இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From:”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை இவர்தான் கண்டுபிடித்தார்.
ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்கவில்லை அமெரிக்கா. அதனால் இமெயில் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.
இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் ‘இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், அதன் சார்பில் இந்தப் போட்டியை அறிவித்துள்ளார்.
நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.
இன்று அமெரிக்காவில் பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார்.
சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்’ பயணத்தை http://www.
Thursday, 25 February 2021
Petrol Price in Chennai
Friday, 1 January 2021
இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் # 2
ரிசர்வ் வங்கி 5 ஆயிரம் அல்லது பத்தாயிரம் என்ற பிரிவுகளில் ரூபாய் நோட்டுகளை வெளியிடலாம் அல்லது மத்திய அரசாங்கம் சொல்லும் வேறு எந்த பிரிவிலும் வெளியிடலாம் ஆனால் 1934-ல் ரிசர்வ் வங்கி சட்டத்தின் தற்போதைய விதிகளின்படி பத்தாயிரத்திற்கும் அதிகமான பிரிவுகளில் ரூபாய் நோட்டுகள் அச்சிட முடியாது இந்தியாவில் காணப்படும் ஞாபகார்த்த நாணயங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளியிடப்பட்டுள்ளன
கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் 75வது ஆண்டைக் கொண்டாடும் பொருட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது 2011ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் 150 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன 2012ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டு நினைவு கூறும் வகையில் ஆயிரம் ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது
இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள்
இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இன் பரிணாம வளர்ச்சியின் மிகவும் ஆச்சரியமானது மற்றும் சுவாரசியமானது. பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரியாது நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் பற்றிய ஆச்சரியமான தகவல்கள் பற்றி இப்போது பார்ப்போம். இந்தியாவில் காகித பணத்தை பயன்படுத்தும் நடைமுறை 18ஆம் நூற்றாண்டில் தொடங்கியது.
அப்போதைய தனியார் வங்கியான பேங்க் ஆப் இந்துஸ்தான், பேங்க் ஆப் இந்திய ரூபாய் நோட்டுகளில் பத்தாயிரம் ரூபாய் நோட்டு தான் மிக அதிக மதிப்பை கொண்டதாகவும் 1938ஆம் ஆண்டு முதல் முறையாக பத்தாயிரம் ரூபாய் நோட்டு வெளியானது பின்னர் அது 1946ஆம் ஆண்டு மதிப்பிலக்கப்பட்டது பின்னர் இரண்டாவது முறையாக 1954ஆம் ஆண்டு இடப்பட்ட பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் 1978இல் மீண்டும் மதிப்பிலக்க செய்யப்பட்டனர்





